காமத்துப்பால் (Inbam)Chapter 121: கனவுநிலை உரைத்தல்

    திருக்குறள் 1218

    Thirukkural Verse 1218 — Dream Visions

    Thiruvalluvar

    துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.


    English Meaning

    When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

    சாலமன் பாப்பையா

    என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

    கலைஞர்

    தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்