காமத்துப்பால் (Inbam)Chapter 121: கனவுநிலை உரைத்தல்
திருக்குறள் 1217
Thirukkural Verse 1217 — Dream Visions
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது.
English Meaning
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
சாலமன் பாப்பையா
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
கலைஞர்
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?