காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்

    திருக்குறள் 1221

    Thirukkural Verse 1221 — Evening Sorrow

    Thiruvalluvar

    மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.


    English Meaning

    Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

    சாலமன் பாப்பையா

    பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

    கலைஞர்

    நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!