காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்

    திருக்குறள் 1224

    Thirukkural Verse 1224 — Evening Sorrow

    Thiruvalluvar

    காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.


    English Meaning

    In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

    சாலமன் பாப்பையா

    அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

    கலைஞர்

    காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது