காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்

    திருக்குறள் 1225

    Thirukkural Verse 1225 — Evening Sorrow

    Thiruvalluvar

    காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?


    English Meaning

    What good have I done to morning (and) what evil to evening?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

    சாலமன் பாப்பையா

    காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

    கலைஞர்

    மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது