காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்

    திருக்குறள் 1226

    Thirukkural Verse 1226 — Evening Sorrow

    Thiruvalluvar

    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.


    English Meaning

    Previous to my husband’s departure, I know not the painful nature of evening.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

    சாலமன் பாப்பையா

    முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

    கலைஞர்

    மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை