காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்

    திருக்குறள் 1227

    Thirukkural Verse 1227 — Evening Sorrow

    Thiruvalluvar

    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.


    English Meaning

    This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

    சாலமன் பாப்பையா

    காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

    கலைஞர்

    காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்