காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்

    திருக்குறள் 1229

    Thirukkural Verse 1229 — Evening Sorrow

    Thiruvalluvar

    பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.


    English Meaning

    When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

    சாலமன் பாப்பையா

    இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

    கலைஞர்

    என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது