காமத்துப்பால் (Inbam)Chapter 122: பொழுதுகண்டு இரங்கல்
திருக்குறள் 1230
Thirukkural Verse 1230 — Evening Sorrow
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.
English Meaning
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
கலைஞர்
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது