காமத்துப்பால் (Inbam)Chapter 124: நெஞ்சோடு கிளத்தல்

    திருக்குறள் 1244

    Thirukkural Verse 1244 — நெஞ்சோடு கிளத்தல்

    Thiruvalluvar

    கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.


    English Meaning

    O my soul! take my eyes also with you, ( if not), these would eat me up (in their desire) to see him.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

    சாலமன் பாப்பையா

    நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

    கலைஞர்

    நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன