காமத்துப்பால் (Inbam)Chapter 124: நெஞ்சோடு கிளத்தல்
திருக்குறள் 1245
Thirukkural Verse 1245 — நெஞ்சோடு கிளத்தல்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.
English Meaning
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?
சாலமன் பாப்பையா
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?
கலைஞர்
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?