காமத்துப்பால் (Inbam)Chapter 125: நிறையழிதல்

    திருக்குறள் 1259

    Thirukkural Verse 1259 — Reserve Overcome

    Thiruvalluvar

    புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு.


    English Meaning

    I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

    சாலமன் பாப்பையா

    அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

    கலைஞர்

    ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்