அறத்துப்பால் (Aram)Chapter 13: அடக்கமுடைமை

    திருக்குறள் 127

    Thirukkural Verse 127 — The Possession of Self-restraint

    Thiruvalluvar

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


    English Meaning

    Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

    சாலமன் பாப்பையா

    எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

    கலைஞர்

    ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்