அறத்துப்பால் (Aram)Chapter 13: அடக்கமுடைமை

    திருக்குறள் 128

    Thirukkural Verse 128 — The Possession of Self-restraint

    Thiruvalluvar

    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.


    English Meaning

    If a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

    சாலமன் பாப்பையா

    தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

    கலைஞர்

    ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்