காமத்துப்பால் (Inbam)Chapter 129: நெஞ்சோடு புலத்தல்

    திருக்குறள் 1296

    Thirukkural Verse 1296 — நெஞ்சோடு புலத்தல்

    Thiruvalluvar

    தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.


    English Meaning

    My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

    சாலமன் பாப்பையா

    காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

    கலைஞர்

    காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது