காமத்துப்பால் (Inbam)Chapter 129: நெஞ்சோடு புலத்தல்
திருக்குறள் 1297
Thirukkural Verse 1297 — நெஞ்சோடு புலத்தல்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு.
English Meaning
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
சாலமன் பாப்பையா
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
கலைஞர்
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்