காமத்துப்பால் (Inbam)Chapter 129: நெஞ்சோடு புலத்தல்

    திருக்குறள் 1299

    Thirukkural Verse 1299 — நெஞ்சோடு புலத்தல்

    Thiruvalluvar

    துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி.


    English Meaning

    Who would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

    சாலமன் பாப்பையா

    ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

    கலைஞர்

    துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?