காமத்துப்பால் (Inbam)Chapter 129: நெஞ்சோடு புலத்தல்

    திருக்குறள் 1300

    Thirukkural Verse 1300 — நெஞ்சோடு புலத்தல்

    Thiruvalluvar

    தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.


    English Meaning

    It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

    சாலமன் பாப்பையா

    நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

    கலைஞர்

    நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்