அறத்துப்பால் (Aram)Chapter 2: வான் சிறப்பு
திருக்குறள் 13
Thirukkural Verse 13 — வான் சிறப்பு
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
English Meaning
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
சாலமன் பாப்பையா
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்
கலைஞர்
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்