அறத்துப்பால் (Aram)Chapter 2: வான் சிறப்பு
திருக்குறள் 14
Thirukkural Verse 14 — வான் சிறப்பு
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
English Meaning
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
சாலமன் பாப்பையா
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்
கலைஞர்
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்