காமத்துப்பால் (Inbam)Chapter 130: புலவி
திருக்குறள் 1307
Thirukkural Verse 1307 — Sulking
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.
English Meaning
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
சாலமன் பாப்பையா
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
கலைஞர்
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு