காமத்துப்பால் (Inbam)Chapter 130: புலவி
திருக்குறள் 1308
Thirukkural Verse 1308 — Sulking
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.
English Meaning
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?
கலைஞர்
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?