காமத்துப்பால் (Inbam)Chapter 130: புலவி

    திருக்குறள் 1309

    Thirukkural Verse 1309 — Sulking

    Thiruvalluvar

    நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.


    English Meaning

    Like water in the shade, dislike is delicious only in those who love.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

    சாலமன் பாப்பையா

    நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

    கலைஞர்

    நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்