காமத்துப்பால் (Inbam)Chapter 131: புலவி நுணுக்கம்
திருக்குறள் 1313
Thirukkural Verse 1313 — Feigned Sulking
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.
English Meaning
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.
கலைஞர்
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்