காமத்துப்பால் (Inbam)Chapter 131: புலவி நுணுக்கம்

    திருக்குறள் 1315

    Thirukkural Verse 1315 — Feigned Sulking

    Thiruvalluvar

    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.


    English Meaning

    When I said I would never part from her in this life her eyes were filled with tears.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

    சாலமன் பாப்பையா

    காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

    கலைஞர்

    ``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி