அறத்துப்பால் (Aram)Chapter 15: பிறனில் விழையாமை

    திருக்குறள் 145

    Thirukkural Verse 145 — Not Coveting Another's Wife

    Thiruvalluvar

    எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.


    English Meaning

    He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

    சாலமன் பாப்பையா

    அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

    கலைஞர்

    எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்