அறத்துப்பால் (Aram)Chapter 15: பிறனில் விழையாமை

    திருக்குறள் 146

    Thirukkural Verse 146 — Not Coveting Another's Wife

    Thiruvalluvar

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.


    English Meaning

    Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

    சாலமன் பாப்பையா

    அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

    கலைஞர்

    பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை