அறத்துப்பால் (Aram)Chapter 15: பிறனில் விழையாமை
திருக்குறள் 147
Thirukkural Verse 147 — Not Coveting Another's Wife
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
English Meaning
He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே
சாலமன் பாப்பையா
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்
கலைஞர்
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்