அறத்துப்பால் (Aram)Chapter 15: பிறனில் விழையாமை

    திருக்குறள் 148

    Thirukkural Verse 148 — Not Coveting Another's Wife

    Thiruvalluvar

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.


    English Meaning

    That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

    சாலமன் பாப்பையா

    அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

    கலைஞர்

    வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்