அறத்துப்பால் (Aram)Chapter 16: பொறையுடைமை

    திருக்குறள் 158

    Thirukkural Verse 158 — The Possession of Patience

    Thiruvalluvar

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.


    English Meaning

    Let a man by patience overcome those who through pride commit excesses.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

    சாலமன் பாப்பையா

    மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

    கலைஞர்

    ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்