அறத்துப்பால் (Aram)Chapter 16: பொறையுடைமை

    திருக்குறள் 159

    Thirukkural Verse 159 — The Possession of Patience

    Thiruvalluvar

    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.


    English Meaning

    Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

    சாலமன் பாப்பையா

    நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

    கலைஞர்

    எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்