அறத்துப்பால் (Aram)Chapter 16: பொறையுடைமை

    திருக்குறள் 160

    Thirukkural Verse 160 — The Possession of Patience

    Thiruvalluvar

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.


    English Meaning

    Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speechof others.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

    சாலமன் பாப்பையா

    பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

    கலைஞர்

    பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்