அறத்துப்பால் (Aram)Chapter 17: அழுக்காறாமை

    திருக்குறள் 163

    Thirukkural Verse 163 — Not Envying

    Thiruvalluvar

    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.


    English Meaning

    Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.”

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

    சாலமன் பாப்பையா

    பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்

    கலைஞர்

    அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்