அறத்துப்பால் (Aram)Chapter 17: அழுக்காறாமை

    திருக்குறள் 164

    Thirukkural Verse 164 — Not Envying

    Thiruvalluvar

    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.


    English Meaning

    (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

    சாலமன் பாப்பையா

    பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

    கலைஞர்

    தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்