அறத்துப்பால் (Aram)Chapter 17: அழுக்காறாமை
திருக்குறள் 165
Thirukkural Verse 165 — Not Envying
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது.
English Meaning
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்
கலைஞர்
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்