அறத்துப்பால் (Aram)Chapter 17: அழுக்காறாமை

    திருக்குறள் 168

    Thirukkural Verse 168 — Not Envying

    Thiruvalluvar

    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.


    English Meaning

    Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

    சாலமன் பாப்பையா

    பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

    கலைஞர்

    பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்