அறத்துப்பால் (Aram)Chapter 17: அழுக்காறாமை
திருக்குறள் 169
Thirukkural Verse 169 — Not Envying
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.
English Meaning
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
சாலமன் பாப்பையா
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க
கலைஞர்
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்