அறத்துப்பால் (Aram)Chapter 17: அழுக்காறாமை

    திருக்குறள் 170

    Thirukkural Verse 170 — Not Envying

    Thiruvalluvar

    அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.


    English Meaning

    Never have the envious become great; never have those who are free from envy been without greatness.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

    சாலமன் பாப்பையா

    பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை

    கலைஞர்

    பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை