அறத்துப்பால் (Aram)Chapter 18: வெஃகாமை

    திருக்குறள் 171

    Thirukkural Verse 171 — Not Coveting

    Thiruvalluvar

    நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.


    English Meaning

    If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

    சாலமன் பாப்பையா

    பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

    கலைஞர்

    மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்