அறத்துப்பால் (Aram)Chapter 19: புறங்கூறாமை

    திருக்குறள் 186

    Thirukkural Verse 186 — Not Backbiting

    Thiruvalluvar

    பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.


    English Meaning

    The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

    சாலமன் பாப்பையா

    அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

    கலைஞர்

    பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்