அறத்துப்பால் (Aram)Chapter 19: புறங்கூறாமை

    திருக்குறள் 188

    Thirukkural Verse 188 — Not Backbiting

    Thiruvalluvar

    துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.


    English Meaning

    What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

    சாலமன் பாப்பையா

    தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

    கலைஞர்

    நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?