அறத்துப்பால் (Aram)Chapter 20: பயனில சொல்லாமை
திருக்குறள் 191
Thirukkural Verse 191 — Against Vain Speaking
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
English Meaning
He who to the disgust of many speaks useless things will be despised by all.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன் பாப்பையா
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
கலைஞர்
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்