அறத்துப்பால் (Aram)Chapter 20: பயனில சொல்லாமை
திருக்குறள் 192
Thirukkural Verse 192 — Against Vain Speaking
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
English Meaning
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர்
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்