அறத்துப்பால் (Aram)Chapter 20: பயனில சொல்லாமை

    திருக்குறள் 193

    Thirukkural Verse 193 — Against Vain Speaking

    Thiruvalluvar

    நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.


    English Meaning

    That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

    சாலமன் பாப்பையா

    பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

    கலைஞர்

    பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்