அறத்துப்பால் (Aram)Chapter 20: பயனில சொல்லாமை
திருக்குறள் 199
Thirukkural Verse 199 — Against Vain Speaking
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
English Meaning
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
கலைஞர்
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்