அறத்துப்பால் (Aram)Chapter 20: பயனில சொல்லாமை
திருக்குறள் 198
Thirukkural Verse 198 — Against Vain Speaking
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
English Meaning
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
சாலமன் பாப்பையா
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
கலைஞர்
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்