அறத்துப்பால் (Aram)Chapter 20: பயனில சொல்லாமை

    திருக்குறள் 197

    Thirukkural Verse 197 — Against Vain Speaking

    Thiruvalluvar

    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.


    English Meaning

    Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

    சாலமன் பாப்பையா

    நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

    கலைஞர்

    பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது