அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்
திருக்குறள் 201
Thirukkural Verse 201 — Dread of Evil Deeds
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
English Meaning
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
சாலமன் பாப்பையா
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
கலைஞர்
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்