அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்

    திருக்குறள் 202

    Thirukkural Verse 202 — Dread of Evil Deeds

    Thiruvalluvar

    தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.


    English Meaning

    Because evil produces evil, therefore should evil be feared more than fire.

    தமிழ் விளக்கம் (Tamil Commentaries)

    மு. வரதராசனார்

    தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

    சாலமன் பாப்பையா

    நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

    கலைஞர்

    தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்