அறத்துப்பால் (Aram)Chapter 21: தீவினையச்சம்
திருக்குறள் 203
Thirukkural Verse 203 — Dread of Evil Deeds
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
English Meaning
To do no evil to enemies will be called the chi ef of all virtues.
தமிழ் விளக்கம் (Tamil Commentaries)
மு. வரதராசனார்
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
கலைஞர்
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்